சென்னை, பிப். 25- 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் 17 மாநிலங்க ளைச் சேர்ந்த 55 மாநிலங்க ளவை உறுப்பினர்களின் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடை பெறும் என்று இந்திய தேர் தல் ஆணையம் அறி வித்துள்ளது. மார்ச் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 13ஆம் தேதியுடன் நிறை வடைகிறது. 16ஆம் தேதி வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும். 18ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்.
மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கும் மாநிலங்களவைத் தேர்தல் மாலை 4 மணி வரை நடை பெறுகிறது. இதை யடுத்து மாலை 5 மணிக்குத் தொடங்கி வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. அந்த வகையில், தமிழ கத்தில் திமுகவைசேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ் கம்யூ னிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்க ராஜன், அதிமுகவின் முத்துக் கருப்பன், கே.செல்வராஜ், விஜிலா சந்தியானந்த், அதி முகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்க ளவை உறுப்பினர் பதவி களுக்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 3 உறுப்பி னர்கள் தேர்வாக வாய்ப்புள் ளது.