tamilnadu

img

அஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத அறிவிப்பாணை தாக்கல்

சென்னை, ஜூலை 30- அஞ்சல் துறை தேர்வை தமி ழில் எழுதலாம் என்ற மத்திய அர சின் அறிவிப்பாணை நகல் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அது தொடர்பான வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத் தது. அஞ்சல்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 11-ஆம்  தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில்  அஞ்சல் துறை தேர்வுகள் ஆங்கி லம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என இருந்தது. இதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார்.  இந்த மனு செவ்வாயன்று (ஜூலை 30)  விசாரணைக்கு வந்த  போது அஞ்சல் துறை தேர்வு களை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கும் மே 10 ஆம் தேதி  அறிவிப்பே தொடரும் என கடந்த 23 ஆம் தேதி மத்திய தகவல்  தொழில் நுட்பத் துறை புதிய  அறிவிப்பாணை வெளியிட்டுள்ள தாகக் கூறி அதன் நகலை மத்திய அரசு வழக்கறிஞர்  தாக்கல் செய்  தார். அதனை ஏற்றுக் கொண்ட  நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இதனால் அஞ்சல் துறை தேர்வுகளை பழைய முறைப்படி தமிழில் எழுதலாம்.