பி.எம்.எஸ் என அழைக்கப்ப டும் பி.எம்.சுப்ரமணியம் பொள் ளாச்சியில் 1909 ஆம் ஆண்டு பிறந்தார். 1924ஆம் ஆண்டு பொள் ளாச்சியை அடுத்த அம்பராம்பா ளையம் எனும் ஊரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்டதற்காக அவரது பெற் றோரால் வீட்டிலிருந்து விரட்டி யடிக்கப்பட்டார் . இதன் பின்னர் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ஃபயர் மேனாக வேலையில் சேர்ந்தார். இங்கு இடதுசாரி இயக்க தோழர்களோடு நெருக்கம் ஏற்பட்டு, அதன் கொள் கைகளால் ஈர்க்கப்பட்டு தன்னை யும் இடதுசாரி இயக்கத்தில் இணைத்து கொண்டார்.பின்னர் போத்தனூரில் ரயில்வே தொழிலா ளர் சங்கத்தினை தோற்றுவித்து அதனை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தார்.
இச்சூழலில் 1946ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலா ளர்களின் போராட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்தை முன் னின்று நடத்தியவர்களில் முதன்மையானவர்களில் தோழர் பி.எம்.எஸ் ஒருவராவார். மேலும், இப்போராட்டத்தின்போது தோழர் எம். கல்யாணசுந்தரம், உமாநாத், பி.எம்.எஸ். போன்றவர்கள் அன்றைய காவல்துறை அதிகாரி ஹரிசான் என்பவரால் கடுமை யாக தாக்கப்பட்டதுடன், புதுக் கோட்டை சிறையிலும் அடைக் கப்பட்டனர். அவர்கள் மீது சதி வழக்கு போடபட்டது. இது பின்னா ளில் திருச்சி சதி வழக்கு என அழைக்கப்பட்டது. இதில் முன்னூ ருக்கு மேற்பட்ட ரயில்வே தொழி லாளர்கள் மீது சதி வழக்கு பதியப் பட்டுள்ளது. இந்த வழக்கு உட னடியாக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லா விட்டால் அனைவருக்கும் வேலை பறி போகும் நிலை ஏற்பட்டது. இந் நிலையில் உடனே பி.எம்.எஸ். தனது சேம நலநிதி ரூ.13 ஆயி ரத்தை கொடுத்து வழக்கினை நடத்தி அதில் வெற்றி கண்டார். இதன் மூலம் திருச்சி சதி வழக்கு உடைந்தது, தொழிலாளர்களின் வேலை காக்கப்பட்டது.
இதன்பின், 1947 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவி னையில் ஏற்பட்ட மதக்கலவரங் களின் போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளையும், பாகிஸ்தானிலிருந்து இந்தியா வுக்கு வரும் இந்தியர்களையும், சீக்கியர்களையும் ஏற்றி வருவ தற்கு தேச பக்தியுள்ள ரயில் ஓட்டுனர்கள் முன் வர வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் நேரு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று ரயிலை இயக்க முன் வந்தவர்களின் பட்டியலில் பி.எம்.எஸ்.முதலிடத் தில் இருந்தார். இத்தகைய வீரமிக்க தோழர் பி.எம்.எஸ் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் தனது 76 வது வயதில் உயிரிழந்தார்.