சுருக்குமடி வலைகளை தடைசெய்ய வேண்டும். இதற்கு துணையாக இருக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பிரச்சனையில் கைமாறும் தொகை குறித்து பொது விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தினர் காதில் பூ சுற்றி வந்து மனு அளித்தனர். மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி, மாவட்டத் தலைவர் இ.ஜஸ்டின், ஏ.சுடலைக்காசி, நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர்கள் என்.மாரி, ஆர்.நம்பு, எம்.உமையவேல், டி.ராஜ், ஏ.ஜியோட்சி, ஏ.திரவியம், எம்.பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.