tamilnadu

img

இஸ்லாமியர்கள் நம்முடைய உறவுகள் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்

பாலபிரஜாபதி அடிகளார்

குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சமயத்தலைவர் பாலபிரஜா பதி அடிகளார் பேசுகையில், இந்தியாவின் அரசியல மைப்பு சட்டம் டாக்டர் அம்பேத்கரால் இயற்றப்பட்டது. உலக அரசியல் சட்டங்களுக்கெல்லாம் முன்மாதிரியான அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு அசைவு ஏற்படுகிறது என்றால் நாட்டின் இறையாண்மை சோதித்துப் பார்க்கப்படுகிறது என்று அர்த்தம். சுதந்திரப் போராட்டத்தில் யார் யார் பாடுபட்டார்கள் என்பதையும், இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்துக்களை விட இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை அதிகம் நேசிக்கிறார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளீர்  என அமெரிக்காவில் சென்று பிரதமர் மோடி பேசினால் போதாது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை பேச வேண்டும். அதுதான் இன்று நாட்டிற்குத் தேவையானது. கேரளா மாநிலம்  வைக்கத்திலே பெரும்பான்மையாக இருந்த நாடார்களும், ஈழவர்க ளும் கோயில் இருக்கிற தெருவுக்குச் செல்லக் கூடாது, முழு வேட்டி  கட்டக் கூடாது, பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற கொடும்  சட்டம் இருந்தது. தந்தை பெரியார் ஆலயம் பிரவேசம் நடத்தியதின் விளைவாக அங்கிருந்தவர்களுக்கு உரிமை கிடைத்தது. கிறித்துவர்க ளும், இஸ்லாமியர்களும் இல்லையென்றால் தாழ்த்தப்பட்ட மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் மீண்டும் ஒடுக்கப்படுவார்கள்.

திப்பு சுல்தான் ஒருமுறை திருவாங்கூரைக் கடந்து செல்லும் போது, அங்கிருந்த பெண்கள் மேலாடை அணியாமல் இருப்பதைக் கண்ட அவர் அமைச்சரிடம் கேட்டார். தாழ்த்தப்பட்டவர்களும், பெண்க ளும் மேலாடை அணியக் கூடாது என்று சட்டம் இருக்கி றது என்று கூறினார். நான் மீண்டும் இங்கு வரும்  போது பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தால் திருவாங்கூர் மன்னருக்கு எதிராகப் போர் தொடுப்பேன் என்றார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் மூலவர் திப்பு சுல்தான், தமிழகத்தின் வேலு நாச்சியார். இப்படிப் பல வரலாறுகள் நமக்கு உண்டு. ஆனால் கைபர் கனவாய் வழியாக வந்த 3 விழுக்காடு மக்கள், வரலாறே இல்லாதவர்கள் இன்று நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் என்ன அரபு நாட்டிலிருந்து வந்தவர்களா? கைபர் கனவாய் வழியாக இஸ்லாமியர்கள் வரவில்லை. இஸ்லாமியர்கள் நம்முடைய உறவுகள், இந்த மண்ணின் சொந்தக்காரர்கள்.

மதம் இல்லை, சாதி இல்லை, ஆணும் பெண்ணும் சமம் என்று  கூறுவதால் (அய்யா வைகுண்ட சாமி) எங்கள் சொத்துக்களை அறநிலையத்  துறை மூலம் கைப்பற்றுவோம் என மிரட்டுகிறார்கள். உண்மையான இந்துக்கள் மனு தர்மத்தைப் படித்தால், வர்னாஸ்ரம தர்மத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அந்த 3 விழுக்காட்டினர் இந்தியாவிலே இருக்க முடியாது, விரட்டியடிக்கப்படுவார்கள். மனிதனுக்குள்ளே பேதம் இருக்கக் கூடாது, ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது. சாதியற்ற, மதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும். அதற்காக எத்தனை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் உறுதியுடன் போராடி வெற்றி பெறுவோம் என்றார்.