இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் தொழில் முனைவேர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு வெள்ளியன்று கோவை நேரு நகர் சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் மற்றும் மகேந்திரா பம்ப்ஸ் நிறுவனத்தின் மகேந்திரன் ராம்தாஸ், அம்மாரூன் பவுண்டரி என்.விஸ்வநாதன், சைமா சட்ட ஆலோசகர் வி.ரகுராஜன், கோப்மா சங்கத்தின் தலைவர் கே.மணிராஜ், டேக்ட் சங்கத்தின் தலைவர் ஜெ. ஜேம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.