tamilnadu

img

தமிழகத்தில் இந்த ஆண்டு இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில்  திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்ட 6 மாதத்தில் நடத்தப்பட வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.