முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி
2014-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை-2023, மாநிலம் முழுவதும் சமநிலைப்பட்ட சுற்றுச்சூழலை வலியுறுத்துகின்றது. 33 விழுக்காடு வனம் மற்றும் அடர்த்தியான பரப்பினை எய்திடும் வகையில் இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இயதிய வன நில அளவை நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள 2017-ஆம் ஆண்டு அறிக்கையின்படி மாநிலத்தின் வனப்பரப்பு 26 ஆயிரத்து 281 சதுர கிலோ மீட்டர். இது மாநி லத்தின் மொத்த புவியியற் பரப்பில் 20.21 விழுக்காடாகும். இயதிய வன நில அளவை நிறுவனத்தால் 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுக ளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஒப்பிடு கையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பு 75 சதுர கிலோ மீட்டர் அதிகரித்துள்ளது. வனம் மற்றும் வனத்திற்கு வெளியே, வனம் மற்றும் மரப் பரப்பி னை அதிகரிக்கச் செய்வதற்கான கொள்கை யைப் பின்பற்றியதால் இச்சாதனை படைக் கப்பட்டது.
வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்தும் நோக்கோடு, 15 வன விலங்குகள் சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோள் பாது காப்பு மண்டலங்கள் போன்ற பல பாதுகாக்கப் பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டு வன உயிரின பாதுகாப்பில் இயதியாவின் முன்னோடி மாநி லமாகத் தமிழ்நாடு திகழ்யது கொண்டிருக்கி றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, மாநிலத்தில் பசுமைப் போர்வையினை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத் தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு மாபெரும் மரம் நடவுத் திட்டம் மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது. இயதத் திட்டம் மாண்புமிகு அம்மாவின் அரசால் 2011-12 முதல் தொடர்யது செயல்படுத்தப் பட்டு இதுவரை 4 கோடியே 69 லட்சம் மரக் கன்றுகள் நடவு மற்றும் பராமரிப்பு பணிகள் நிறை வேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2019-20ஆம் ஆண்டில் 71 லட்சம் மரக்கன்று கள் நடுவதனை இலக்காகக் கொண்டு இய தத் திட்டம் தொடர்யது செயல்படுத்தப்பட்டு வரு கிறது.
மரங்கள் மண்ணின் வளங்கள், காற்றின் கரங்கள், நிலங்களுக்கு மரகதப் போர்வை போர்த்தி அழகு பார்க்கின்றன. பறவைகளுக்கு சரணாலயம், இயற்கையின் வாசம். மரங்கள் மண்ணின் வளங்கள், காற்றின் கரங்கள், பறவைகளின் சரணாலயம், மரங்கள் அதிகரிக்கும்போது காற்று குளிர்கிறது, வாயு மண்டலத்தில் உள்ள தட்பவெப்ப நிலையும் சீராகின்றது. கார்பன்டை ஆக்ஸை டின் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்கிறது, ஓசோன் படலத்தில் ஓட்டை விழாமல் இருக்கிறது, பூமி புன்னகைக்கிறது, பயிர்கள் செழிக் கின்றன, நோய்கள் குறைகின்றன, நீர்வளம் பாதுகாக்கப்படுகின்றது, ஆரோக்கியமான மனித வளம் நாட்டில் பெருகுகின்றது. இயற் கையை காப்போம்!
(வனத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசியதிலிருந்து...)