tamilnadu

img

அதிமுக அரசின் செயல் வெட்கக் கேடானது

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை

கே.பாலகிருஷ்ணன் சாடல்


சென்னை, நவ.30- தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை ஏற்றுக்கொள் ளப்படாத நிலையில், அதனை அமல்படுத்தும் அதிமுக அரசின் செயல் வெட்கக்கேடானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சாடினார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை-2019ஐ திரும்பப் பெறக்கோரி சனிக்கிழமையன்று (நவ.30) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கல்விப் பாதுகாப்பு தேசியக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கே.பாலகிருஷ்ணன் பேசி யதன் சுருக்கம் வருமாறு: புதிய கல்விக் கொள்கையால் ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்து அதிமுக அரசுக்கு துளியளவும் கவலை இல்லை. வரைவு அறிக் கையை ஏற்கப்படாத நிலையில்,  பாஜக ஆட்சி செய்யும் மாநி லங்களில் கூட அதன் அம்சங்கள் அமலாகாதபோது தமிழகத்தில் அமல்படுத்தி இருக்கிறார்கள். 5, 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்துள்ளனர். தமிழ கத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா அல்லது பாஜகவின் பினாமி ஆட்சியா?

தேசியக் கல்விக்கொள்கை அம லானால், கல்வி மீதான மாநில அர சின் உரிமை முழுமையாக பறி போகும். பாடப்புத்தகங்களைக் கூட மத்திய கல்வி வாரியத்தின் அனுமதி பெற்றுத்தான் அச்சிட முடியும். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மேல்தட்டினருக்கான கொள்கையாக உள்ளது. இவற்றை யெல்லாம் கண்டித்து தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய கல்வி அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்தி லும் பெரிய அளவிற்கு எதிர்ப்பு இல் லாத நிலையில், தமிழகமே இந்த கல்விக் கொள்கையை எதிர்த்து போராடுகிறது. அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுகிற கல்வியாளர்களை கொண்டு தமிழ கம் தழுவிய போராட்டத்தை முன் னெடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் பேரா.ஜவாஹிருல்லா தலை மையில் நடைபெற்ற இப்போராட் டத்தில் திமுக மகளிரணி தலை வர் கனிமொழி எம்.பி., மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லைசத்யா மற்றும் முனைவர் வே.வசந்திதேவி,  கி.வெங்கட்ராமன் (தமிழ்த்தேசிய பேரியக்கம்), கொளத்தூர் மணி (திராவிடர் விடு தலைக் கழகம்), ஹென்றி திபேன் (மக்கள் கண்காணிப்பகம்), திருமுரு கன் காந்தி (மே 17 இயக்கம்), தீபக் நாதன் (டிசம்பர் 3 இயக்கம்), இனிகோ இருதயராஜ் (கிறிஸ்துவ நல் லெண்ண இயக்கம்) உள்ளிட்டோர் பேசினர்.