சென்னை, செப்.27- தமிழகம் மற்றும் புதுவையில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மாக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சில தினங்களாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்துள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஜூன் 1 முதல் செப்.27 வரை பதி வான மழையின் அளவு 38 சென்.மீட்டர். இது இயல்பைவிட 16 சதவிகிதம் அதிகம் என்றும் சென்னையில் இயல்பு அளவு 42 செ.மீ என்றும் தற்போது 39 சதவிகிதம் அதிகம் பெய்திருக்கிறது என்று கூறினார். வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் மூன்றாவது வாரம் தொடங்க வாய்ப்புள்ள தாக கூறினார்.