கோவை, ஜூலை 29 - கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத் சேனா நிர்வாகி மீது கோவை மாநகரக் காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தர வின்பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த சில நாட்க ளுக்கு முன் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளியை கைது செய்யக்கோரி தமிழகம் முழு வதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றது. இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தர வின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், போத்தனூர் அண்ணாநகரைச் சேர்ந்த பாரத் சேனா பொறுப் பாளர் அருண்கிருஷ்ணன் (21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர், அவர் மீது வழக்கு கள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செவ்வாயன்று மாநகர காவல் ஆணையா ளர், அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்த ரவு நகலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் மாநகரக் காவல் துறை வழங்கியது.