tamilnadu

img

சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் குறித்து அவதூறு

கோவை, ஜூலை 22 –  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத் தையும், கட்சியின் மூத்த தலைவர்களை யும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருபவர்களை கைது செய்யக்கோரி புதனன்று இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தியாகராய நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகி றது. இந்த அலுவலகம் தொடர்பாக  புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக பதிவிட்டும், கட்சி யின் மூத்த தலைவர்கள் குறித்து மிகவும் இழிவாக கருத்துகளை பதிவிட்டு வரும்  சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி புதனன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொரு ளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஆறுமுகம், சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்று கண்டன முழக்கங் களை எழுப்பினர். இதேபோல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலு வலகமான ஜீவா இல்லம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட  செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ராம மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் மற்றும் சிவசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று  கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், கோவை மாவட்டத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட மையங் களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்ம நாபன், ஏ.ராதிகா மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, திமுக, விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வா கிகள் பங்கேற்று கண்டன முழக்கமிட் டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், குமரன் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், மாவட்டச்  செயலாளர் ரவி,  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்ட செய லாளர் செ.முத்துகண்ணன் மற்றும்  மாவட்டசெயற்குழு, மாவட்டகுழு உறுப்பினர்கள் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டு கண்டன  முழக்கங்களை எழுப்பினர் இதேபோல், மாவட்ட முழுவதும் பல்வேறு இடங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ,  விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

சேலம்

சேலம் டவுன் ரயில்வே நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந் திரன், திமுக மத்திய மாவட்ட பொருளா ளர் ஜி.கே.சுபாஷ், விசிக மாநகர மாவட்ட செயலாளர் கோ.ஜெயச் சந்திரன், திராவிடர் கழக செயலாளர் இளவழகன் மற்றும் சிபிஎம் மாவட்ட  செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். இதே போல், அரியாக்கவுண்டம்பட்டி, மேச் சேரி, கோரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ வட்டச் செயலாளர் எம்.எஸ்.கிருஷ்ணகுமார், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பி. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஆர்.முரு கேசன், திமுக ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், காங்கிரஸ் நகரத்  தலைவர் ஜலாலுதீன், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கு.இராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன.