tamilnadu

img

இந்தி தெரியவில்லையென்றால் வெளியேறு என்பதா?

ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு சிபிஎம் கண்டனம்

சென்னை, ஆக.22- இந்தி தெரியவில்லையென்றால் வெளி யேறு என்று கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடை பெற்ற ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழ கம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலி ருந்து மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்து வம், ஹோமியோபதி, யுனானி உட்பட அலோ பதி அல்லாத மருத்துவர்கள் 37 பேர் இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றுள்ள னர். ஆனால், இந்த முகாமில் மொத்த பயிற்சி யும் இந்தி மொழியிலேயே நடைபெற்றுள் ளது.

பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்தி பேசும் மாநிலங்கள் அல்லாத மருத்துவர்கள் கேள்வி யெழுப்பியபோது, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியா ராஜேஷ் கொடேசா ‘எனக்கு ஆங்கிலம் சரளமாக பேசவராது, நான் இந்தியில் தான் பேசுவேன். ஆங்கிலம் தான் வேண்டுமென விரும்புபவர்கள் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறலாம்’ என்று ஆண வமாக கூறியுள்ளார். ஆயுஷ் அமைச்சக செய லாளரின் இந்தப் போக்கு வன்மையாக கண் டிக்கத்தக்கது.

இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சி வகுப்பை நடத்தியிருந்தால் இந்தி தெரியாத மருத்துவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மொழியில் மட்டுமே பயிற்சி நடத்துவோம். இந்தி தெரி யாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறு வது பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதா கும்.  எனவே, மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிட்டு இனிவரும் காலங்களில் அகில இந்திய அளவிலான பயிற்சி வகுப்புகளில் இந்தி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழி களிலும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமி ழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.