சென்னை, ஆக. 27- ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்க ளில் மருத்துவர்கள் போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் பணி களை புறக்கணித்து மருத்துவ மனை வளாகத்தில் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற் றது. குமரி மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மற்றும் ஆரம்ப சுகா தார நிலையங்களில் பணியாற் றும் 400-க்கும் மேற்பட்ட மருத்து வர்கள் ஒருநாள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் புற நோயாளிகள் சிகிச் சையை புறக்கணித்து மருத்து வர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றப் படாவிட்டால் விரைவில் சாகும் வரை உண்ணாநிலைப் போராட் டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பட்டமேற் படிப்பு மாணவர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 77 ஆரம்ப சுகாதார நிலையத்தில் 225 மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 95 சத வீதம் மருத்துவர்கள் பணிக்கு வர வில்லை. திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 350 மருத்து வர்கள் மற்றும் மருத்துவ மேற் படிப்பு மாணவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
ஸ்டாலின்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களை உடனடி யாக அழைத்துப் பேசி, கோரிக் கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றுமாறு திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். மருத்துவர்கள் போராட் டத்தால் அரசு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தர மான அவசர சிகிச்சையை வழங்க முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறியுள்ளார். சாகும் வரை உண்ணாநிலை இருக்கும் அரசு மருத்துவர்களை அரசு உடனே அழைத்து, அக்கறை யுடன் பேசி கோரிக்கையை முறை யாக பரிசீலனை செய்து நிறை வேற்ற வலியுறுத்தியுள்ள ஸ்டா லின், மக்களின் தேவை கருதி யும், மருத்துவப் பணியின் அவ சர முக்கியத்துவம் கருதியும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை அரசு மருத்து வர்கள் விலக்கிக் கொள்ளவும் கோரியுள்ளார்.
ஊதிய உயர்வு வழங்க பரிசீலனை: அமைச்சர்
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“அரசு மருத்துவ சேவை என்பது மகத்தான சேவை. அந்த பணியினை செய்து வரும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றார். மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. ஆகவே, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வரவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.