tamilnadu

img

தலைநகரின் அண்ணாசாலை முடக்கம்

சென்னை, ஏப்.24- ஊரடங்கை மீறுபவர்களை தடுப்பதற்காக அண்ணா சாலையை மாநகரக் காவல்துறை மூடி யுள்ளது. அத்துமீறி சென்றால் கடும் நடவடிக்கை எ டுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வரக்  கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஊர டங்கை மீறி சிலர் வாகனங்களில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த சென்னை  காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

முதற்கட்டமாக தலைநகரின் முக்கிய சாலை யான அண்ணா சாலையை மூடியுள்ளனர். குறிப்பாக ஜெமினி மேம்பாலம் முதல் திருவல்லிக்  கேணி வாலாஜா சிக்னல் வரையிலான சாலைகள்  மூடப்பட்டுள்ளன. இனி அச்சாலை அத்தியாவசியப்  பொருட்கள் வாங்கும் நேரம் தவிர பிற நேரங்களில்  திறக்கப்படாது. அத்திவா சிய தேவைகளுக்காக செல்பவர்கள் கூட முழுமையாக தணிக்கை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர்.

அண்ணா சாலையில் இதுவரை வாகனத் தணிக்கை நடத்தப்பட்டு வந்த 6 சோதனைச் சாவடி கள் 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. ஊரடங்கு முடியும்  வரை இந்த நடைமுறை பின்பற்ற உள்ளனர். அண்ணா சாலையைப் போன்றே, வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதைக் கண்ட றிந்து மாநகரின் மற்ற சாலைக ளையும் மூட காவல்துறையினர் திட்டமிட்டிருப் பதாகவும் கூறப்  படுகிறது.