tamilnadu

img

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடிப் பேர் வேலையிழப்பு

4 கோடிப் பேர் வேலையிழப்பு

இந்தியாவில் வியாழக்கிழமை காலை எட்டுமணி நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 21,398-ஐ எட்டியுள்ளது. உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 681 ஆக உள்ளது. 4,458 பேர் குணமடைந்துள்ளனர் இந்நிலையில், உலக வங்கி விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந் தியாவில் 4 கோடி புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் வேலையிழந்துள்ளனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 50,000 பேர் முதல் 60,000 பேர் நகர்ப் புறங்களிலிருந்து கிராமப்புறங்களுக்குச் சென்றுவிட்டனர். இந்த இடப் பெயர்வு சர்வதேச அளவோடு ஒப்பிடுகையில் இரண் டரை மடங்காகும்.

புலம்பெயர்ந்தோரை பாதுகாப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தலை யீடுகளை அரசாங்கம் பரிசீலிப்பது நல்லது. பணம் அனுப்பும் உள்கட்டமைப்பு வசதி, வீடு திரும்பிய குடும்பங்களின் வாழ்வாதா ரம், வருமானம் இழப்பு, சுகாதாரம், வீட்டு வசதி, கல்வி மற்றும் வேலை உத்தரவாதம் ஆகியவற்றை செய்துகொடுப்பது அவசி யம்.

இந்தத் தொற்று நோய் சுகாதார நிபு ணர்களின் உலகளாவிய பற்றாக்குறை, உலகளாவிய ஒத்துழைப்பு, மருத்துவத் துறையில் நீண்டகால முதலீடுகளின் அவ சர தேவையையும் எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் மே 3-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டால் இந்தத் தொழிலாளர்களின் வாழ் நிலை மேலும் மோசமடையும்.