tamilnadu

img

பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை ஏப்.10- மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.   இதேகாரணமாகக் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே மாதம் நடைபெறுவதாக இருந்த பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு காலம் முடிந்த பிறகு, புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.