சென்னை, செப்.6- நாங்குனேரி மற்றும் விக்கிர வாண்டி தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்ப டும் என்று எதிர்ப்பார்க்கப்படு கிறது. மக்களவை தேர்தலின் போது நாங்குனேரி தொகுதி காங்கி ரஸ் எம்.எல்.ஏ. எச். வசந்த குமார், கன்னியாகுமரி தொகுதி யில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குனேரி சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜி னாமா செய்தார். கடந்த ஜூன் மாதம் விக்கிர வாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து நாங்கு னேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்க ளாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்க ளுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை யடுத்து அந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இடைத் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடு களையும் செய்து தயார் நிலை யில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் மகா ராஷ்டிரா, அரியானா, ஜார்க் கண்ட் மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது. மகா ராஷ்டிரா, அரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபை பதவிக் காலம் நவம்பர் மாதம் இரண்டா வது வாரம் முடிகிறது. ஜார்க் கண்ட் மாநிலத்தில் டிசம்பரில் நிறைவு பெறுகிறது. எனவே இந்த மூன்று மாநிலங்களிலும் நவம் பர் 2வது வாரத்துக்குள் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணை யம் ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்த மூன்று மாநி லங்களிலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச் சாவடி ஏற்பாடு மற்றும் ஓட்டுச்சாவடி ஊழியர்க ளுக்கு பயிற்சி ஆகிய ஏற்பாடு கள் அனைத்தும் செய்து முடிக் கப்பட்டுவிட்டன.
இடைத்தேர்தல்
நவம்பர் முதல் வாரத்தில் வாக்குப்பதிவு நடத்தும் வகை யில் 3 மாநில தேர்தலும் நடத்தப் படும். அப்போது அந்த தேர்தலு டன் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரி வித்தனர். எனவே நாங்குனேரி, விக்கிர வாண்டி ஆகிய 2 தொகுதி களுக்கும் நவம்பரில் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள் ளது. இதற்கான தேர்தல் தேதி அட்டவணை 3 மாநில தேர்தலு டன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.