tamilnadu

img

தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சிபிஎம் இரு சக்கர வாகனப் பிரச்சாரம்

இராஜபாளையம், மார்ச் 31-


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து இராஜபாளையம் மற்றுத் திருவில்லி புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இராஜபாளையம் பொன் விழா மைதானத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு சிபிஎம் நகரச்செயலாளர் பி.மாரியப்பன் தலைமைவகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கணேசன் முன்னிலை வகித்தார்.சட்டமன்ற உறுப்பினர் தங்கப் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி, காங்கிரஸ் நகர் தலைவர் சங்கர்கணேஷ், மதிமுக நகரச் செயலாளர் ராஜா, தி.க மாவட்டத் தலைவர் திருப்பதி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மாடசாமி, மாவட்டச் செயலாளர் பி.பிரசாந்த், சிபிஎம் நகர்க்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், வெள்ளைச்சாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். 


திருவில்லிபுத்தூர் 



திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு நகரச் செயலாளர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திமுக நகரச் செயலாளர் அய்யாவு பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் துவக்கவுரையாற்றினார்.இதில் ஒன்றியச்செயலாளர் எஸ்.வி.சசிக்குமார், டி.ரேணுகாதேவி, மரியடேவிட், கே.இசக்கி, வீரசதானந்தம், சந்தனம் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக காமராஜர் சிலை அருகிலிருந்து வாகனப் பிரச்சாரம் துவங்கி சீனியாபுரத்தில் நிறைவடைந்தது.


;