சென்னை, ஜூலை 29 - ஐசிஎப் நிறுவனத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி வேலைவாங்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிஐடியு, பணி யின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழி லாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப் நிறு வனத்தில் 3 ஆயிரத்து 600 நிரந்தர தொழி லாளர்களும், ஏர்ப்ரீஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் 4 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பணி புரிகின்றனர். பெரம்பூர் மங்களபுரம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (24) என்ற ஒப்பந்த தொழிலாளி செவ்வாயன்று (ஜூலை 28) ஐசிஎப் பர்னிஷிங் தொழிற்சாலை கூடம் 30இல் டெஸ்பேட்ச் லைனில் பி.எப்.டி எனப்படும் பாட்டரி வண்டி இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மயங்கி கிடந்த அவரை சக தொழி லாளர்கள் மீட்டு, ஐசிஎப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டாதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் கூறுகையில் சமீப காலமாக ஐசிஎப் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலா ளர்கள் விபத்தில் மரணம் அடையும் அவலம் தொடர்கி றது. தொழிற்சாலை உற்பத்தி கட்டமைப்பு இட வசதிக்கு அப்பாற்பட்டு அபரிமிதமாக உற்பத்தி இலக்கை தீர்மா னிக்கின்றனர்.
பாதுகாப்பு விதி முறைகளை மீறி தொழி லாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தி அவசர கதியில் வேலை வாங்குவதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. விபத்து மரணங்க ளும் நடைபெறுகிறது என்றார். ரயில் பெட்டிகள் உற்பத்திக்கான தொழில்நுட்பக் கல்வித் தகுதியும், அனுபவம் இல்லாத தொழிலாளர் களை குறைந்த கூலிக்கு சுரண்டி வேலை வாங்கும் தனியார் ஒப்பந்த நிறுவ னங்களின் லாப வெறியே இத்தகை விபத்துகளுக்கு காரணம். ஐசிஎப் அதி காரிகளும் தொழிலார்களின் பாது காப்பை பற்றி எந்த அக்கறையும் இன்றி உள்ளனர். அவசர கதியில் கூடுதல் உற்பத்தியை முடிக்க நிர்ப்பந்தம் செய்வதால், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை ஐசிஎப் நிர்வாகம் பின் பற்றாதை அரசும், தொழிலாளர் துறையும் கண்டும் காணாமல் இருப்பதை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் கூறினார். தொழிலாளர் நலத்துறை உடனடியாக விசா ரணை நடத்தி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீதும் பொறுப்பான அதிகாரிகள் மீதும் கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்து மரணங் கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மகேந்திரன், தற்போது மரண மடைந்த தொழிலாளியின் இளம் வயதை கணக்கில் கொண்டு குடும்பத்திற்கு சட்ட ரீதியான இழப்பீட்டை வழங்க முதன்மை நிறுவனமான ஐசிஎப் நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.