சென்னை, நவ.17- தென்பெண்ணை ஆறு தொடர்பான, நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரி வித்திருக்கிறார். பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த புகாருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். அதில், நதிநீர் பங்கீட்டு உரிமைகளில் அதிமுக அரசு அக்கறை காட்டுவதில்லை என துரைமுருகன் குறை கூறியிருப்பதை மறுத்திரு க்கிறார். தென்பெண்ணையாறு விவகாரத்தில், கர்நாடக அரசிடமிருந்தும், மத்திய அரசிட மிருந்தும் சாதகமான பதில் வரப்பெறாத நிலை யில், இயற்கையாக ஓடுகின்ற நீரை கர்நாடக அரசு தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவிடுமாறு, கடந்தாண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்தது.
மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் அணை கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில், கடந்த ஜூலை மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட தாகவும் அமைச்சர் தெரி வித்திருக்கிறார். இடைக்கால மனுவை மட்டுமே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்றும் அசல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை துரைமுருகன் கூறிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.