சென்னை,ஜூன் 7- தமிழகம் முழுவதும் பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி துவங்கியுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். கடந்த 3-ஆம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிட்டன. விண்ணப்பித்தல், கலந்தாய்வு உள்ளிட்டவை ஆன்லைனில் நடைபெறும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 45 மையங்களில் வெள்ளியன்று முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன. பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த போது மாணவர்கள் சமர்ப்பித்திருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வருமான வரிச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரி சான்று, சிறப்புத்தகுதி உடைய வர் என்றால் அதற்கான சான்று ஆகியவற்றின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படும். ஜூன் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் 20-ஆம் தேதி கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை 3 முதல் 28-ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறு கிறது.