சாலைப் போக்குவரத்து சங்கம் முழக்கம்
கோவை, ஆக.14– இ - பாஸ் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு சாலைப் போக்கு வரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக் கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அறி விக்கப்பட்டு பயணிகள் பேருந்து தவிர ஆட்டோ, டாக்சி, சரக்கு வாகனங்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இருந்த போதிலும் இதனால் எவ்விதப் பயனும் இல்லாத நிலையே தற் போது உள்ளது. மாவட்டம் விட்டு வேறு மாவட்டங்களுக்கு வாடகைக்குச் செல்வதற்கு இ பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், எளிதாக இ பாஸ் கிடைப்பதில்லை. இதனால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக இ - பாஸ் முறையை முற்றாக ரத்து செய்ய வேண்டும். மேலும் அரசு அறிவித்த நிவாரணம் பெரும் பகுதியினருக்குக் கிடைக் காததால் அனைத்துத் தொழிலாளர் களுக்கும் மாதம் ஒன்றிற்கு ரூ7,500 வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று சிஐடியு சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலைப் போக்குவரத்து மாவட் டச் செயலாளர் ஏ.எம்.ரபீக், தலைவர் வேணுகோபால் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத் தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வினை அளித்தனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இதில், சாலைப் போக்குவரத்து மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.
தருமபுரி
தருமபுரியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு போக்கு வரத்துக் கழக ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.முரளி, சாலைப் போக்குவரத்து சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.பெருமாள், ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ கோபால் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். அரூரில் சாலைப் போக்குவ ரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.ரகுபதி, பென்னா கரத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.ராஜி, போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க மாவட்ட துணை்தலைவர் மணோன்மணி ஆகியோர் தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.
திருப்பூர்
திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோ மொபைல் லேபர் யூனியன் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற ஆர்ப் ்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் தலைமை ஏற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மோட்டார் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு, பொருளாளர் அருண், ஆட்டோ சங்கத் தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராமன், துணைச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முடிவில் வடக்கு மற்றும் தெற்கு வட்டாட் சியர் அலுவலகங்களிலும், வட் டாரப் போக்குவரத்து அலுவல கங்களிலும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் இயக்கத்திற்கு சங்க நிர்வாகி கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சுப் பிரமணியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இவ்வியக் கத்தில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம், மாவட்ட துணைத் தலைவர் ரகுராமன், சாலைப் போக்கு வரத்து சங்க நிர்வாகிகள் எஸ்.செல் வராஜ், தனபால், முருகானந்தம், மணிகண்டன், தங்கவேல் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.