திருச்சி,அக்.6- திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில் ரூ. 13 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை முகமூடி அணிந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக 7 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ், மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நகைக்கடை திருட்டில் முக்கிய நபராகக் கருதப்படும் திருவாரூர் முருகனை தேடி வருகின்றனர். இந்நிலையில், முருகனின் அண்ணன் மகன் முரளி (26) என்பவரை திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்தனர்.