tamilnadu

img

அண்ணா பல்கலை. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் கட்டாய கட்டண வசூல்

கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு

சென்னை, ஆக.22- அண்ணா பல்கலைக் கழ கம் உள்ளிட்ட உயர் கல்வி நிறு வனங்கள் மனிதாபிமானமற்ற முறையில் கட்டாய கட்டண வசூல் நடத்துவதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த தேசமே முடங்கி கிடக்கிறது. மக்கள் வேலை யிழந்து, வருமானமிழந்து வாழ வழியின்றி சொல்லொணா துய ரங்களுக்கு ஆட்பட்டு வீடடி லேயே முடங்கி கிடக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா பல்க லைக்கழகம் உள்ளிட்ட தமிழ் நாட்டில் இருக்கிற உயர்கல்வி நிறுவனங்கள் நடப்பாண்டிற் கான கல்விக் கட்டணத்தை உட னடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்ற அறி விப்பை வெளியிட்டுள்ளது மனி தாபிமானம் அற்ற செயலாகும். அண்ணா பல்கலைக்கழ கத்திற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் இம்மாதம் 30ம் தேதிக்குள் தங்கள் செமஸ்டர் கட்டணத்தை கட்டாயம் கட்ட வேண்டும் என்றும், கட்டணம் கட்ட தவறும் மாணவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணை நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கிவிடுவோம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறிக்கை வெளி யிட்டுள்ளது வன்மையான கண்ட னத்திற்குரியதாகும்.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி எந்தவொரு மாணவ ரிடமும் கடந்த கல்வியாண்டின் கட்டணத்தையோ அல்லது நடப்பு கல்வியாண்டின் கட்ட ணத்தையோ கேட்டு வற்புறுத்த கூடாது; அவ்வாறு எந்தவொரு நிர்வாகம் வற்புறுத்தினாலும் புகார் அளிக்கும்படி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமே அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் உயர்நீதிமன்றமும் இதே போன்ற கருத்தை தனியார் பள்ளி களுக்கும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அண்ணா பல்க லைக்கழக நிர்வாகம் தனியார் கல்லூரிகளின் கொள்ளை லாபத்திற்காக மாணவர்களிடம் இந்த கட்டாய கட்டண வசூலை அறிவித்துள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

எனவே, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் நடப்பாண்டிற்கான கல்வி கட்ட ணம் உள்ளிட்டு செலுத்த வேண் டிய அனைத்துவிதமான கட்டண அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென் றும்; கொரோனா பெருந் தொற்று முடியும் வரை எந்தவொரு கட்டணத்தையும் மாணவர்களி டம் கேட்டு துன்புறுத்தக் கூடாது எனவும்; தமிழக முதலமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு கட்டாய கட்டண வசூலை தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.