tamilnadu

img

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவில்லை: கிருஷ்ணசாமி

சென்னை, அக்.10- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவில்லை என புதிய தமிழகம்  கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரி வித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத் தேர்த லில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை யில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழ கம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,“சில கோரிக் கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்த லில் கூட்டணி சேர்ந்தோம். ஆனால் அதிமுக கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றம் அடைந்  தோம். எனவே, நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வுக்கு ஆதரவு கிடையாது” என்றார்.

;