tamilnadu

img

100 நாள் வேலை குளறுபடிகளை போக்க வலியுறுத்தி ஜூன் 25-இல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முற்றுகை

மதுரை, ஜூன் 15- 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி ஜூன் 25-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்க ளில் மனு கொடுத்து முற்றுகை போராட் டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந் திய விவசாயத் தொழிலாளர் சங்கம் அறி வித்துள்ளது.  இச்சங்கத்தின் மாவட்டச் செயலா ளர்கள் கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், செய்தியா ளர்களைச் சந்திதார்.அப்போது அவர் கூறியதாவது:- 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை போக்க வலி யுறுத்தியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜூன் 25-ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களில் மனு கொடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். உரிய நேரத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத் தாததால் விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் .

கடும் வறட்சியால் தமிழகம் பாதிக் கப்பட்டுள்ளது. வறட்சியை சமாளிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொழிலா ளர்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளனர். பொதுவிநியோகத் திட் டத்தில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடைபெறு கிறது. ஒரு பகுதியில் ஆயிரம் ரேசன் கார்டு இருந்தால் அதில் 200 கார்டு களுக்கும் குறைவாகவே அரிசி அனுப்புகிறார்கள். இதனால் ரேசன் பொருட்கள் முறையாகக் கிடைப்ப தில்லை. வாக்குப்பதிவு நாளன்று வாக்க ளிக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் வழங்குவதாக அரசு கூறியது. ஆனால் அதை செயல்படுத்த வில்லை. இந்த அரசு பொய்யான வாக்கு றுதிகளைக் கொடுத்து விவசாயத் தொழி லாளர்களை ஏமாற்றி வருகிறது. தமி ழக அமைச்சர்கள் வறட்சி குறித்தோ, குடிநீர் பிரச்சனை குறித்தோ மத்திய அர சிடம் எதுவும் பேசவில்லை. 

 டெல்டா மாவட்டங்களில் அந்தப் பகுதி விவசாயிகளுக்குத் தெரியா மலே ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான நிலை பாட்டையே மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக எடுத்து வருகின்றன. 100நாள் வேலைத் திட்டம் மத்திய அர சின் திட்டம் என்பதால் மாநில அரசு அலட்சியமாக செயல்படுகிறது என்றார். 100நாள் வேலையில் தொழிலா ளர்கள் வேலை பார்பதில்லை என குற் றச்சாட்டு வருகிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ. லாசர், 100 நாள் தொழிலாளர்களை வேலை வாங்கத் தெரியவில்லை. இதற்கு அரசின் குறைபாடே காரணமே தவிர தொழிலாளர்கள் அல்ல. இது மத்திய அரசின் திட்டம். எனவே வேலை கொடுத்தால் போதும் என்ற எண்ணத் தில் தமிழக அரசு உள்ளது. என்றார் .  பேட்டியின் போது மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மதுரை மாவட் டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் மு. பாலுச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.