tamilnadu

95 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டசைல்டுலைன் சார்பில் அதன் திட்ட இயக்குநர் கருப்பசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில்  நடப்பு ஆண்டில் 2423அழைப்புகள் 1098- க்கு வந்தன. இதில் 1299 அழைப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் 95 குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற 229 குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர் . கல்வி உதவிதேவைப்படும் 120 குழந்தை கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கல்வி வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்றார்.

;