tamilnadu

img

சென்னைக்கு அருகில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்டேட்

சென்னை நகருக்கு அருகில் சேமித்துவைக்கப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்டேட் பாதுகாப்பாக உள்ளதாக கூறும் சுங்க துறை அதிகாரிகள்.

கரூரை சேர்ந்த தனியார்  நிறுவன் ஒன்று விவாச பணிக்காக   740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்டேடை  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது,நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்றுகூறி இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான கிடங்கில் 35 கண்டெய்னர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. தற்போதும் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத் துறை கிடங்கில்தான் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.இந்த நிகழ்வை பார்க்கும் சென்னை மணலியில் பகுதி அருகில் உள்ள மக்களுக்கு ஒரு வித பயம் எழாமல் இல்லை.