மதுரை, ஏப்.19- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயி ரத்தை தாண்டிவிட்டது. பலி 500-ஐ தாண்டி யுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி நில வரப்படி மகாராஷ்டிரத்தில் 3,651 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 211 பேர் உயிரிழந்துள்னர். தமிழ் நாட்டில் 1,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 1,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 பேர் உயிரிழந் துள்ளனர். ராஜஸ்தானில் 1,351 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 1,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் 1,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 1,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ள னர். தெலுங்கானாவில் 844 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர்.
கொரோனா பரவியுள்ள 32 மாநிலங்களில் 16,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,302 பேர் குணம டைந்துள்ளனர். 519 பேர் பலியாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரமாக உள் ளது. ஞாயிறு மட்டும் நாடு முழுவதும் 404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று
கொரோனவை வைரஸ் தொற்றால் தமிழகத் தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை தொற்று பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 1,372 ஆக இருந்தது. ஞாயி றன்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட தால் மொத்த எண்ணிக்கை 1,477 ஆக அதி கரித்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
105 பேரில் அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கும், தஞ்சாவூரில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், திண்டுக்கல், திருவாரூர் தலா ஐந்து பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். தென்காசியில் நான்கு பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, நாகப்பட்டினம் தலா மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு நெல்வேலி, மதுரை, விருதுநகர் தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 46 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.