மகாராஷ்டிராவின் ராய்காட்டில் இன்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது
தேசிய பேரிடர் (என்.டி.ஆர்.எஃப்) மீட்பு குழு அந்த இடத்தை அடைந்துள்ளனர்.இதில் 200 க்கும் மேற்பட்டோர் சிக்கிவிடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது .
இது 10 ஆண்டுகள் பழமையான பல மாடி கட்டடமாகும். இதி 40 குடியிருப்புகள் இருந்தன. முதல் மூன்று தளங்கள் இடிந்து விழுந்த பின்னர் ஒரு சிலர் கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக ராய்காட் மாவட்ட ஆட்சியர் நிதி சவுதாரி தெரிவித்துள்ளார்.