திட்டக்குடி, நவ. 18- தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவக் கல்லூரி கள் அமைப்பதற்கு அனுமதி பெற்ற நிலையில் மேலும் மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்கு வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரி வித்துள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூரில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 24 மணி நேர இலவச அவசர சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திறந்து வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் மேலும் மூன்று மருத்துவ கல்லூரி கள் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.