சென்னை,ஜூலை 17- நடப்பாண்டில், 2 ஆயிரம் புதிய பேருந்துகள் ரூ. 600 கோடி செலவில் வாங்கப்படும் என்றும் முதல மைச்சர் கூறினார். சட்டப்பேரவையில் புத னன்று(ஜூலை17) பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, பால்வளத் துறை ஆகிய துறைகள் தொடர்பான 18 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, காஞ்சிபுரம் மாவட் டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேன்மைமிகு மையம் ரூ. 120 கோடி ஏற்படுத்தப்படும். கூடுதல் ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ. 105 கோடி செலவில் நலவாழ்வு மையங்க ளாக மாற்றி அமைக்கப்படும். ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்க ளின் சமூக பங்களிப்புடன், ‘எனது மருத்துவமனை எனது பெருமை’ என்ற திட்டம் முன்னெடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
கரூர், தருமபுரி, தேனி, தூத்துக் குடி, கடலூர் ஆகிய ஊர்களை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும். இத னால், ஆவின் மூலமாக கொள் முதல் செய்யப்படும் பால், நாளொன் றுக்கு 33 லட்சம் லிட்டரிலிருந்து, 35 லட்சம் லிட்டராக உயரும் என்றார்.