கடலூர், மே 3- சென்னை கோயம்பேட்டிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு திருபிய 19 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா தொற்று பரவியைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஊர் திரும்பி னர். இவர்களைக் கண்டறிந்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் புதியதாக தனி மைப்படுத்தும் முகாம்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதன்படி, விருத்தாசலத்தில் கடலூர் மாவட்டம் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாற வேண்டிய நிலையில் வெளிமாநிலம், வெளிமாவட்டத் திலிருந்து வந்தவர்களால் புதிய தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கோயம்பேட்டில் அதிக நபர்களுக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய கடலூர் மாவட்டத்தினர் 600 பேர் திரும்பியிருக்கி றார்கள். மேலும், கேரளாவிற்கு அறுவடை இயந்திரம் கொண்டுச் சென்றவர்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து 100 பேர் திரும்பியிருக்கிறார்கள். அவர்க ளுக்கு தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதி 700 பேரையும் தனி மைப்படுத்தி ஆங்காங்கே முகாம் அமைத் துள்ளோம். அவர்களுக்கு 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கோயம்பேட்டிலிருந்து வந்த வர்கள் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் குறித்த தகவலை கிராமமக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத்துறை யினர், காவல்துறையினருக்கு தெரி விக்க வேண்டும். மேலும். வெளியிடங்களி லிருந்து கடலூர் மாவட்டம் திரும்பிய வர்கள் தங்களை 14 நாட்களுக்கு தனி மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கையை மீறுவோர் மீது கண்டிப் பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.