உத்திரமேரூர், ஜூலை 24- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் அருகே அனுமந்தண்டலம் கிராமத்தில் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்கால பல்லவர் காலத்தை சார்ந்த நடுகல் வீரன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்- கலைஞர்கள் சங்கத்தின் காஞ்சி புரம் மாவட்டத் தலைவரும், உத்திர மேரூர் வரலாறு ஆய்வு மையத் தலைவருமான சு. பாலாஜி தலை மையில் யுவராஜ், கோகுல சூர்யா ஆகியோர் அனுமந்தண்டலம் கிரா மத்தில் கள ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, நடுகல் வீரன் சிலை கிடைத்துள்ளது. இதுகுறித்து பாலாஜி கூறுகை யில், “உத்திரமேரூர் பகுதி பல்லவர் கள், சோழர்கள், விஜய நகர மன்னர் கள் உட்பட பல்வேறு மன்னர்கள் ஆண்ட பகுதியாகும். தற்போது, இப் பகுதியில் நடுகல் ஒன்று கண்டெ டுக்கப்பட்டுள்ளது. அதுவும் வீர னின் கையில் உள்ள கேடயம் வித்தி யாசமான வடிவத்தோடு ஊரை காக்க தன் இன்னுயிர் நீத்த வீரனை 1200 ஆண்டுகளாக அதன் வரலாறு தெரியாமல் பக்தியின் பெயரால் போற்றி பாதுகாத்து வழிப்பட்டு வந்ததை காணமுடிந்தது” என்றார். ஊரின் மைதானத்தில் அரச மரத்தடியில் ஒரு பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. 80 செ. மீ. உயரமும், 65 செ.மீ. அகலமும் கொண்டது இந்த வீரன் சிலை. அந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த வீரன் குலதெய்வமாகவும் உள்ளார். இதற்கு ஆண்டிற்கு ஒரு முறை கெடாய் வெட்டி பொங்கலிட்டு பூசை செய்து வழி பட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இன்னும் எத்தனையோ வர லாற்று சின்னங்களும், ஆவ ணங்களும் பல்வேறு கிராமங்களில் மறைந்துள்ளது. எல்லாவற்றையும் கண்டறிந்து மக்களுக்கு தெரி யப்படுத்தி இவ்வரலாற்று ஆவ ணங்களை பாதுகாக்க முன் வர வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் பாலாஜி தெரிவித்தார்.