tamilnadu

img

பாகிஸ்தான்: ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 46 பேர் பலி

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி ராவல் பிண்டிக்கு தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ரயில் லியாகத்ப்பூர் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் தொடர்ந்து பரவியது. இந்த தீ விபத்தில் 46 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்காக காரணம் குறித்து அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;