tamilnadu

img

காஷ்மீர் விவகாரம்:  வான்வழி பாதையை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது  வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை இந்தியா திரும்ப பெற்றதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நேற்று தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான்-இந்தியா உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்தை ரத்து செய்து, வாகா எல்லையை மூடவும் முடிவு செய்துள்ளது. இதை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை வரவழைக்கவும் அரசு முடிவு எடுக்கப்பட்டிருந்து.

மேலும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்றும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று இரவு முதல் பாகிஸ்தான், இந்தியா விமானங்கள் பறப்பதற்கான தடை விதித்து தமது 9 வான்வழி பாதைகளில், 3 வான்வழி பாதைகளை மூட உத்தரவிட்டுள்ளது. 

இந்தியா ஆப்கானிஸ்தான் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும்படி பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. லாகூர் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் 46,000 அடி உயரத்திற்கு கீழாக பறக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடு விதித்துள்ளது. 
 

;