tamilnadu

img

இந்தியா - சீன இரு நாடுகளின் வெளியுறவுதுறை அமைச்சர்கள் சந்திப்பு - 5 அம்ச திட்டங்களுக்கு ஓப்புதல்

இந்தியா-சீனா எல்லை பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூடி எல்லையில் பதட்டத்தை தவிர்க்க 5 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 

வியாலளன்று மாஸ்க்கோவில் சந்தித்த இந்தியா மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டமானது, 2 மணி நேரம் நீடித்தது .

இந்த கூட்டத்தில், இந்தியா-சீனா உறவுகளை வளர்ப்பது தொடர்பான தலைவர்களின் ஒருமித்த கருத்துக்களை இரு தரப்பினரும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும். எல்லைப் பகுதிகளில் தற்போதைய நிலைமை இரு தரப்பினரின் நலனுக்காக இல்லை.எனவே இரு தரப்பினரின் எல்லைப் படையினரும் தங்கள் உரையாடலைத் தொடர வேண்டும். சர்சைக்குரிய பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.இதன் மூலம் தேவையற்ற பதற்றத்தினை தவிர்க்க வேண்டும்.

சீனா-இந்தியா எல்லை விவகாரங்களில் இரு தரப்பினரும் தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு அமைதியை பேணுவார்கள். பதற்றத்தினை அதிகரிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும். இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் சிறப்பு பிரதிநிதி பொறிமுறையின் மூலம் தொடர்ந்து உரையாடல் மற்றும் தொடர்பு கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்பாட்டு பொறிமுறையும் (WMCC) அதன் கூட்டங்களைத் தொடர வேண்டும். நிலைமை தளர்த்தப்படுவதால், எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் புதிய நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை இரு தரப்பினரும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
 

;