tamilnadu

img

கலவை இயந்திரத்தில் பயணித்த வெளி மாநிலத்தவர் கைது

இந்தூர்:
மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து சிமிண்ட் கலவை இயந்திரத்திற்குள் பதுங்கி சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மகாராஷ்டிரத்திலிருந்து லக்னோ நோக்கி சிமிண்ட் கலவை இயந்திரம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தூர் அருகே சென்ற வாகனத்தை காவல்துறை கண்காணிப்பாளர் உமாகாந்த் சதுர்வேதி தடுத்தி நிறுத்தினார். இந்த இயந்திரத்திற்குள் 18 பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

;