tamilnadu

img

பாகிஸ்தானில் 49 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

பாகிஸ்தானில் 49 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் டெங்கு பாதிப்பு தீவிர நிலையை அடைந்துள்ளது. பாகிஸ்தானில் வரலாறு காணாத வகையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரமாக அதிகரித்துள்ளது. டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ள 49,587 பேரில் 13,173 பேர் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர்கள் என்றும், 13,251 பேர் சிந்து பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், 9,855 பேர் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 625 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  


 

;