காபூல், ஆக.7- ஆப்கன் தலைநகர் காபூலில் போலீஸ் குடி யிருப்பு அருகே புதனன்று கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.