tamilnadu

img

கம்போடியா அடுக்கு மாடி கட்டிடம் விழுந்ததில் 3 பேர் பலி

கம்போடியாவில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கம்போடியாவின் சிகனவுக்வில்லி என்ற மீனவ கிராமத்தில், சீனாவைச் சேர்ந்த ஒருவர்  7 மாடி கட்டிடம் ஒன்றை கட்டி வந்தார்.  இந்த பணியில் கம்போடியா தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்திருந்த நிலையில், இன்று அதிகாலை கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில், கட்டிடத்தில் தங்கி வேலை பார்த்து வந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். . மேலும் 18க்கு  காயமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
 

;