tamilnadu

img

பிலிப்பைன்ஸ் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் நோயாளி உட்பட 9 பேர் பலி

பிலிப்பைன்சில் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று உல்லாச விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், நோயாளி உட்பட 9 பேரும் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் சம்பொவாங்கோ டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள திபோலாக் நகரில் இருந்து நேற்று முன்தினம் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 நர்சுகள் மற்றும் 2 விமானிகள் உள்பட 9 பேர் பயணித்தனர்.

இந்த விமானம் லாகுனா மாகாணத்தில் உள்ள பான்சோல் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறை உடனான தகவல் தொடர்பை இழந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது விமானம் அங்குள்ள உல்லாச விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், நோயாளி உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். உல்லாச விடுதியில் இருந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.

;