tamilnadu

img

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து மூழ்கியது - 8 பேரின் உடல்கள் மீட்பு

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சட்லெஜ் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, படகு ஒன்று கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியதில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கிழக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட ஒகாரா மாவட்டத்தில் இன்று சுமார் 40 பேருடன் சட்லெஜ் நதியில் பயணித்த படகு ஒன்று திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினரால் 8 உடல்களை மீட்கப்பட்டுள்ளன. மேலும் படகில் பயணித்த மற்றவர்களை தேடும் பணியில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 

;