tamilnadu

நீரவ் மோடியின் ஜாமீன் மனு 4வது முறையாக நிராகரிப்பு

லண்டன், ஜுன் 12- ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, லண்டன் சிறையில் அடைக் கப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 4வது முறையாக பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மனுவை விசாரித்த நீதிபதி இங்ரிட் சிம்லெர், நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கி னால் அவர் மீண்டும் நீதி மன்றத்தில் ஆஜராவார் என்பது உறுதியில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார். அத்துடன் சாட்சியங்கள் மற்றும் தடயங்களை மாற்று வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர் ரூ.13, 000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடு பட்டது கடந்த ஆண்டு ஜனவரியில் தெரியவந்தது.  பாஜக அரசு துரித நட வடிக்கை எடுக்காததால் அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். இந்த விவ காரம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்டவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவர்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக செயல் பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதை யடுத்து, அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது. அதை யடுத்து அவர் லண்டன் சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் மனு

இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி நீரவ் மோடி அடுத்தடுத்து தாக்கல் செய்த 3 மனுக்களை வெஸ்ட்மின் ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை யடுத்து, பிரிட்டன் உயர்நீதி மன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி இன்கிரிட் சிம்லெர் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  அப்போது, நீரவ் மோடி  எந்த நாட்டுக்கும் தப்பமாட் டார் என்று உத்தரவாதம் அளிக்க பல்வேறு தனி நபர்கள் தயாராக இருப்ப தாகவும், இந்திய அரசு குறிப்பிடுவது போல அவர் கிரிமினல் குற்றவாளி இல்லை என்றும் அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.  அதேசமயம், குற்ற வாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இந்தியா ஒப்பந்  தம் மேற்கொள்ளாத நாடு களுக்கு நீரவ் மோடி தப்ப வாய்ப்புள்ளது என்று இந்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி, இந்த  விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் கூடு தல் நேரம் எடுத்துப் பரி சீலிக்க உள்ளதாகவும், மனு மீதான உத்தரவை புதன் கிழமை பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், புதனன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க பிரிட்டன் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சொகுசு சிறை அறை
நீரவ் மோடி இந்தியா வுக்கு நாடு கடத்தப்பட்டால், அவருக்காக மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் பாதுகாப்பு மிகுந்த  12-ஆம் எண் அறை தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சக அதி காரி ஒருவர் செவ்வாய்க் கிழமை தெரிவித்தார்.  அவர் மேலும் கூறுகை யில், அந்த அறையில் போதிய வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ளது. 3 மின்விசிறிகள், 6 மின் விளக்குகள், பொருள் கள் வைப்பதற்கான வசதி, மருத்துவ வசதி, சுத்தமான குடிநீர், போர்வை, தலை யணை உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்றார்.
 

;