tamilnadu

img

பிலிப்பைன்சில் லாரி விபத்தில் 19 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரியில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ளது அபாயோ மாகாணத்தில், அரசிடம் இருந்து உதவித் தொகை மற்றும் வேளாண்மைக்கு விதைகள் பெற்றுக்கொண்ட சுமார் 50 பேர் லாரியில், தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மலைப்பாங்கான பகுதி ஒன்றில் லாரி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 22 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

;