திருநெல்வேலி,ஜூன் 25- நெல்லையில் உள்ள புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான ஹரிசிங் உடல்நலக்குறைவால் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொ ரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் ஹரிசிங் வியாழனன்று தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.