கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களின் எண்ணிக்கை 30 சதவீதம் சரிவு கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் துறை யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரிய அளவிலான பாதிப்பைத் துவக்கத்திலேயே எதிர்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படும் நிலையில், மக்கள் அதிகமாக டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தைப் பயன்படுத்தும் கடைகள், வர்த்தக வளாகங்கள், விமானப் பயணங்களில், திரையரங்குகள் போன்ற அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கடந்த 6 வாரங்களில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை 30 சதவீதம் சரிவு கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.