tamilnadu

img

லண்டன்: லாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில், கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 39 சடலங்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட 39 பேரின் சடலங்கள் கடந்த 23-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரி, பல்கேரியாவில் இருந்து வேல்ஸ் வழியாக கடந்த சனிக்கிழமையன்று லண்டன் நுழைந்துள்ளதாகவும், இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு ஐயர்லாந்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் உயிரிழந்த அனைவரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று நேற்று போலீசார் தெரிவித்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அவர்கள் இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்துக்குள் லாரி நுழைவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னரே இரந்தவர்கள் 39 பேரும் இறந்திருக்கக்கூடும் என விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த கண்டெய்னர் லாரிக்குள் வெப்பநிலை மைனஸ் 25 டிகிரிக்கும் குறைவான அளவில் இருந்ததால் அதன் உள்ளே இருந்த 39 பேர் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், லாரியை ஓட்டி வந்த ராபின்சன் என்பவரை ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.