tamilnadu

img

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் காட்டுத்தீ காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர். இந்தநிலையில் இன்று பிரிஸ்பேன் பகுதியில் ஹெலிகாப்டர்களில் தண்ணீர் கொண்டு சென்று தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரை இயக்கிய விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

;